Thursday, December 15, 2011

கூடன்குளம் வல்லுனர் அறிக்கை..

கூடன்குளம் பற்றிய வல்லுனர் அறிக்கை கீழ்கண்ட இணைப்பில் உள்ளது..


http://www.thehindu.com/multimedia/archive/00841/Expert_Group_report_841167a.pdf


நன்றி..

Monday, December 12, 2011

விமர்சனம்- விமர்சனத்தைப் பற்றிய ஒரு விமர்சனம்...

இன்றைய தேதியில் பலரும் பலவிதமான விமர்சனங்களை பல விசயங்களில் சொல்லி வருகிறார்கள். கருத்து சொல்லுகிற விசயங்களைப் பற்றி தெளிவாக தெரிகிறதோ இல்லையோ தமது கருத்துக்களை உடனுக்குடன் சொல்லி விடுகிறார்கள். அது சரியானதா? அல்லது  தவறான பழக்கமா? என யோசித்த பொழுது இதைப் பற்றிய ஒரு பதிவு எழுதலாம் எனத் தோன்றியது.
முதலில் கருத்து சொல்ல ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும்  இல்லை. ஆனால் ஆழ்ந்த அறிவு இல்லாமல் சொல்லப் படுகிற விசயங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆயுள் குறைவு என்பதே உண்மை. ஒரு விசயத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் பொழுது நாம் இரு விசயங்களை செய்கிறோம்.  ஒன்று அவ்விசயத்தைப் பற்றி நமது பார்வையை அல்லது உணர்வை தெரிவிக்கிறோம் மற்றொன்று நம்மைப் பற்றியும் நாம் மற்றவர்களுக்கு மறைமுகமாக ஒரு புரிதலைக் கொடுக்கிறோம். ஆம் நமது விமர்சனம் நமக்குத் தெரியாமல் நம்மைப் பற்றியும் வெளிப் படுத்துகிறது.
விமர்சனம் என்பது ஒரு விசயத்தை, சம்பவத்தை, ஆக்கத்தை, தனிநபரை,குழுவை, அல்லது சமுதாயத்தை  மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும்
அது ஒரு மதிப்பீடு.. தொழில் நுட்ப முறையில் சொன்னால் அது ஒரு quality analysing போன்றது.
எந்த விசயத்தை எடுத்தாலும் அதில் நான்கு வகையான மனிதர்கள் இருப்பார்கள்.1.அதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் 2.குறைவாக தெரிந்தவர்கள் 3.நன்கு தெரிந்தவர்கள் 4.வல்லுனர்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தைப் பற்றி கருத்து கூறுவது எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இதில் தெரியாதவர்கள் சுய கட்டுப்பாடுடன் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது அவர்களைத்தான் பாதிக்கும். சில சமயம் அவர்களின் மதிப்பைக் கூட குறைத்து விடும்.
உதாரணமாக மருத்துவரீதியான ஒரு விவாதம் என்று வைத்துக் கொள்வோம்,  பொதுவாக மருத்துவர்களுக்கு ( 1 சதவீதம் தகுதி குறைந்தவர்களை விட்டு விடுவோம்) அதைப் பற்றிய அறிவு நன்றாக இருக்கும். அவர்களிடம் ஒரு எழுத்தாளரையோ, இயக்குனரையோ விவாதம் செய்ய சொன்னால் எப்படி பொருத்தம் இல்லாமல் இருக்குமோ அது போலத்தான் இன்று பல விசயங்களில் பல பேர் கருத்து சொல்லி வருகிறார்கள்.
இன்னொன்று சமுதாயத்தில் சிலர் அடிபட்டு மிதிபட்டு கடினமாக உழைத்து ஒரு நல்ல உயரத்திற்கு வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றி மிக எளிதாக தரக்குறைவாக விமர்சிப்பது... அல்லது மிகக் கடினப்பட்டு உருவாக்கிய ஒரு படைப்பை மிக எளிதாக  அதை பற்றிய புரிதல் இல்லாமல் போகிற போக்கில் விமர்சிப்பது..
ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டீ குடிப்பதற்காக ஒரு சிறிய டீக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டு கையில் தினசரியோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார் ஜார்ஜ் புஷ் இப்படி செய்திருக்கக் கூடாது நானாக இருந்தால் வேறு மாதிரி செய்திருப்பேன். இதைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொள்கிறார்களா அல்லது அடுத்தவர்களையெல்லாம் முட்டாளாக நினைக்கிறார்களொ தெரியவில்லை. உண்மையில் அவ்வளவு அறிவிருந்தால் டீக்கடையில் தினசரி படித்து பொழுது போக்க அவசியம் என்ன வந்தது. இது ஒரு உதாரணம் தான். இது போல் பல பேர் பல ரூபங்களில்...
படித்தது ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு மிகச் சிறந்த அறிவுறை என்பது எப்படி வாழ வேண்டும் என்பதை வாயால் சொல்வதல்ல, மாறாக வாழ்ந்து காட்டுவது. இன்று நிறைய பேர் வாயால்தான் சொல்கிறார்கள் மற்றவகள் மட்டும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற கொள்கையோடு இருக்கிறார்கள்.
பல அப்பாக்கள் தங்கள் குழந்தைகளிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்லுகிறார்கள் அல்லது அவர்கள் முன் அதைக் குடிக்கிறார்கள். பின்பு சிகரெட் குடிக்கக் கூடாது என்று பிள்ளைகளுக்கு  அறிவுறை கூறுகிறார்கள். அப்பாக்கள் தான் குழந்தையின் முதல் ஹீரோ அல்லது ரோல் மாடல்.
நான் இதை ஏன் கூறுகிறென் என்றால் விமர்சனங்கள் பண்ணும் போதும் நாம் நல்ல அப்பாக்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்பற்காகத்தான்..
இன்னொரு விசயத்தையும் கூற விரும்புகிறேன். நம்மிடையே யாராவது ஒரு கேள்வி கேட்டால் பல பேர் அதைப்பற்றி தெரியாவிட்டாலும் கூட தெரியாது என்று சொல்வதில்லை. ஏதாவது ஒரு பதிலை குத்துமதிப்பாக சொல்லும் பழக்கமிருக்கிறது. முதலில் நமக்கு என்ன தெரியும் எனன தெரியாது என்பதப் பற்றிய புரிதல் வேண்டும். எது தெரியாது என்ற புரிதல் இருந்தால்தான் அதைப் பற்றிய தேடலில் ஈடுபட முடியும்.விமர்சனம் செய்பர்களில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
விமர்சகன் தனிமனித விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற் சென்று விமர்சிப்பவனாகவும், பக்கச்சார்பற்றவனாகவும், துறைசார்ந்த நல்லறிவு உடையவனாகவும் விளங்க வேண்டும். மேலும் பிற துறைகள் சார்ந்த தெளிவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும், அனைத்துத் துறைகளையும் சமமாக மதிக்கும் ஆற்றல் மிக்கவனாகவும், ஆக்கத்தை ஒப்புமைப்படுத்தி ஆராயும் பண்புடையவனாகவும் இருக்க வேண்டும் என்பவை முக்கியமானவையாகும்
ஒருவர் சொன்னார் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். ஏதாவது வழக்கு என்றால் வழக்கறிஞரிடம் செல்கிறோம். விஞ்ஞான விசயங்களில் சந்தேகமென்றால் விஞ்ஞானிகளிடம் தானே செல்ல வேண்டும். அதற்கு மட்டும் எழுத்தாளர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் ஏன் சொல்கிறோம் என்று.
உங்களுக்கு இலக்கிய அறிவு இல்லையெனில் ஒரு இலக்கியத்தைப் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். இலக்கிய வாதிகளின் விமர்சனங்களைப் படியுங்கள். இதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருங்கள். பார்வையாளராக இருந்து கற்றுக்கொள்ளுங்கள் . ஏனெனில் அது உங்கள் துறையல்ல. உங்கள் துறை சார்ந்த விசயங்களில் உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வையுங்கள். அது உங்களுக்கு புகழைத் தேடித்தரும். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைப்பது  சிறுமையே தரும்.
ஒரு பாமரனாக எல்லா விசயங்களிலும் கருத்து கூறுவேன். இது என் ஜனநாயக உரிமை என்று கூறுவீர்களானால் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பாமரன் தன்னுடய பணியை உணர்ந்து அதை செவ்வனே செய்பவன். தாணுண்டு தன் பணியுண்டு என வாழ்பவன். ஒரு மருத்துவரை விட ஒரு பொறியாளரை விட  ஒரு கலைஞனை விட ஒரு எழுத்தாளனை விட ஒரு விஞ்ஞானியை விட ஒரு பாமர விவசாயி உன்னதமானவன். ஏனென்றால் அவன்தான் உலகத்திலுள்ள உயிர்கள் வாழ்வதில் பெரும் பங்கு வகிக்கிறான்.. அவன் யாரையும் விமர்சிப்பதில்லை..

Monday, December 5, 2011

நான் ரசித்த கவிதை..

வேலிக்கு  வெளியே
தலையை  நீட்டிய  என்
கிளைகளை  வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு  அடியில்
நழுவும்  என்  வேர்களை
என்ன  செய்வாய்?
-கவிக்கோ  அப்துல் ரகுமான் 

சுயநலமிக்க மனிதரைச் சாடும் இந்த கவிதை நான் மிகவும் ரசித்தது..

Wednesday, November 30, 2011

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு பற்றிய ஆவணப்படம் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை தயாரித்துள்ளது. பதிவிறக்கம் செய்ய ரியல் பிளெயர் இன்ஷ்டால் செய்யவும். ப்ளெ செய்யும் போது டவுன் லோட் ஆப்சன் வீடியோ மேல் வரும்.


நன்றி..

Saturday, November 26, 2011

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு...

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற செய்தி சில்லரை வர்த்தகம் செய்பவர்களின் காதில் தேளாய் கொட்டியிருக்கும்.பெப்சி கோக் கம்பெனிகளின் வருகை எப்படி இந்திய குளிர்பான நிறுவனங்களை ஏப்பம் விட்டதோ அதெ நிலைமைதான் சில்லரை வர்த்தகத்திலும் ஏற்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவு. தெருவில் கீரை விற்க கார்பரெட் நிறுவனங்கள் வந்தால் நம்மூர் கீரைக்காரி என்னதான் செய்வாள். இன்றைய தினம் இது பற்றி பார்க்கலாம்.
சரி சில்லரை வர்த்தகர்கள் என்பது யார்? உணவுப் பொருட்கள், சோப்பு, பவுடர் போன்றவற்றில் சில்லரை  வணிகம் செய்யும் நம்மூர் தொழிலதிபர்கள் அனைவரும் சில்லரை வியாபாரிகள். இவர்கள் அனைவருமே நல்ல உழைப்பாளிகள், திறமைசாலிகள் ஆனால் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும்,விவசாயிகளுக்கும் நேர்மையானவர்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். எப்படியெனில் இவர்கள் யாரும் அரசாங்கத்திற்கு ஒழுங்காக வரி கட்டுகிறார்களா என்றால் ஆம் என்று அவர்களே கூட சொல்ல மாட்டார்கள். கோடிஸ்வரர்கள் கூட இன்னும் சாதரண ரேசன் கார்டுகள் மட்டுமல்ல ஆயிரமோ இரண்டாயிரமோ தான் இருக்கும் படியான வரிமான வரி  சான்றிதழ் வைத்திருப்பார்கள். மேலும் விவசாயிகளிடம் விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களையும்  பாதிப்படைய செய்கின்றனர். இது இவர்களுடைய தவறு மட்டுமல்ல அதிகாரிகளின் பங்கும் உண்டு. ஆனால் அதற்காக இவர்களுடைய தவறுகளை நியாயப் படுத்தி விடமுடியாது. இலஞ்சம் வாங்குவோர் குற்றமா கொடுப்பவர் குற்றமா என்பது போலத்தான். பதுக்கல் இன்னும் சில பிரச்சனைகளும் உண்டு. இவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.
பொதுமக்களிடையே நல்ல உறவும் குறைந்து கொண்டே வருகிறது. ஏதாவது பொருட்கள் பற்றி கேள்வி கேட்பவர்கள் இவர்களைப் பொருத்தவரை சாவுகிராக்கி வாடிக்கையாளர்கள். எதுவும் கேட்காமல் அப்படியே சொன்ன விலைக்கு வாங்கும் மேல்த்தட்டு கீழ்த்தட்டு வாடிக்கையாளர்கள் நல்ல வாடிக்கையளர்கள். வாடிக்கையாளர் சேவை குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. வாடிக்கையளரே நமது முதலாளி என்பது எழுத்துக்களில் மட்டுமே இருக்கும். துளியும் சேவையில் இருக்காது. உதாரணமாக நீங்கள் வாங்கிய பொருள் சரியில்லை என்று திருப்பி கொடுத்துப் பாருங்கள் அவர்களின் குணத்தை அப்போது பார்க்கலாம். சில வணிகர்கள் வாங்கிய பொருள் திருப்பி பெற்றுக்கொள்ள மாட்டாது என்றெ எழுதி வைத்திருப்பார்கள்.
பொதுமக்களிடையெ நல்ல உறவு இல்லாததே அரசு ஊழியர்களின் பல போராட்டங்கள் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் என்பதை நாம் அறிவோம். உதாரணமாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராட்டத்தின் போது பொதுமக்களே அதை ஆதரிக்காதது.. இதுவும் அது போலத்தான்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு யாருக்கு இலாபம் தரும்?ஏன் இதை கொண்டு வந்தார்கள்? இதன் மூலம் நன்மைகள் ஏதாவது இருக்கிறதா?
முதலில் அரசாங்கத்திற்கு என்ன இலாபம் என்பதை பார்க்கலாம். மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகம் மொத்த விற்பனை அளவுக்கு பணமதிப்பில் உயரும்.பத்து பேர் பாக்கெட்டில் இருக்கும் பணம் ஒருவர் பாக்கெட்டில் மட்டுமே இருக்கிற நிலை ஏற்படும். முன்னெரெல்லாம் ஒரு கல்லூரி இருக்கிறெதென்றால் அதன் கேண்டின் ஒருவரது காண்டிரக்டிலும் சுத்தம் செய்வது இன்னொருவரது காண்டிரக்டிலும் இப்படியாக பலபேர் பிழைக்கும் நிலை இருந்தது. இப்பொழுதெல்லாம் எல்லாமுமே நெரடி நிர்வாகத்தில் கொண்டு வந்து பணம் வெளியே செல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். மாணவர்களின் பணம் அவர்களின் கையிலிருந்து வெளியெ செல்லக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கரை. சரி இதைபற்றி தனி ப்ளாக் எழுதிக் கொள்ளலாம். சொல்ல வருவது என்னவென்றால் பணம் ஒரெ இடத்தில் அதாவது வெளிநாட்டு முதாலாளிகளின் பாக்கெட்டுகளில் குவியும். இதனால் அரசாங்கத்திற்கு என்ன நன்மை என்னவென்றால் வரி கணிசமான அளவு கிடைக்கும். அவ்வளவே. சில்லரை வியாபாரிகள் ஒழுங்காக வரி கட்டியிருந்தால், விவசாயிகளை முன்னேற்றியிருந்தால், பதுக்கல், விலையேற்றம் இவற்றில் நியாயமாக நடந்திருந்தால் இவ்வளவு விலையேற்றம் வந்திருக்காது. அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை கதை போலத்தான்.ஒருபக்கம் நல்ல விளைச்சல் இருந்தால் விலை இல்லை விளைச்சல் இல்லாவிட்டால் இமயமாய் விலையேற்றம். காய்கனிகளின் விலை எழுபது எண்பது ரூபாயை தொட்டது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் மறக்காது.
பொதுமக்களுக்கு என்ன நன்மையென்று பார்ப்போம். இவற்றால் ஆரம்பத்தில் கொஞ்சம் விலைகுறைவும் தரமும் கிடைக்கலாம். இது தற்காலிக பயன் மட்டுமே. அவர்களின் கையில் முழுவர்த்தகமும் வந்த பிறகு அவர்களின் இராஜாங்கம்தான்.ஆரம்பத்தில் பெப்சி கோக் கம்பெனிகள் விற்ற விலையும் இப்போது விற்கும் விலையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்க. முழுவர்த்தகமும் அவர்களின் கட்டிப்பாட்டுக்குள் செல்வது அவ்வளவு கடினம் அல்ல. தோனியும், டெண்டுல்கரும் நம்மூர் விக்ரம், சூர்யா மற்றும் நடிக நடிகைகள், இன்னும் சில பிரபலங்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.
சுதெசி என்ற வார்த்தை இப்பொழுது கெட்ட வார்த்தையாகிவிட்டது. உலகமயமாக்கல் என்ற வார்த்தை பூஜிக்கப் படுகின்ற வார்த்தையாகிவிட்டது. ஆனால் இது ஒரு மாயவார்த்தை என்பது பொருளாதார மேதைகளுக்கு புரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. இது ஒரு நிர்வாக திறமையின்மை என்று ஏன் மேதைகளுக்கு புரியவில்லை?.உங்கள் வீட்டை நிர்வாகம் செய்ய யார் கையிலாவது கொடுப்பீர்களா? அவர்கள் உங்களை விட திறமையாக நிர்வாகம் செய்யலாம்.உங்களைவிட அதிக பணத்தை மிச்சப் படுத்தலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கு சேவை செய்யவில்லை உங்களுக்கு தெரியாத ஓட்டைகள் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா?அது போலத்தான் உலகமயமாக்கலும். உங்கள் வளங்கள் உங்களுக்கு தெரியாமலே கொள்ளையடிக்கப் படும்.முன்னெரெல்லாம் கொள்ளையர்கள் கட்டம் போட்ட சட்டையும் கழுத்தில் கைக்குட்டையுமாக இருப்பார்கள், இப்போதெல்லாம் கழுத்தில் டையும் நுனிநாக்கில் ஆங்கிலமும் தான் அடையாளம்.அதெற்காக இடதுசாரிகள் மேற்கு வங்காளத்தை வைத்தது போல் வைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. உள்நாட்டு மக்களை உயர்த்துவது போல் இருக்க வேண்டும் என்பதே எமது நிலை.
மொத்தத்தில் ஒவ்வொருவரும் தமது கடமைகளை சரியாக செய்தால் அதாவது தன்நலம் மற்றும் பொதுநலம் இரண்டிலுமே அக்கரை செலுத்தினாலெ போதும். இவற்றில் ஏதாவது ஒன்றுதான் முக்கியம் என்று நினைத்து நடந்து கொண்டால் இன்றல்ல என்றாவது பிரச்சினைகள் வரும் என்பது அனுபவ பாடம்.


Wednesday, November 16, 2011

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்.

1.    சுமார் இருபது வருடங்களை மனதிற் கொண்டு திட்டமிடுங்கள்.
2.    உங்களுக்கு எத்தனை அறைகள் வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். சிறியதாய் நிறைய அறைகள் இருப்பதை விட பெரியதாய் ( ஒரு கட்டில்,ஒரு பீரோ,ஒரு மேசை போடுமளவிற்கும் விசாலமாக நடக்குமளவிற்கும்) இருப்பது நல்லது.
3.    கண்டிப்பாக சுற்று சுவர் எழுப்புங்கள். வீடு அழகாய் தோற்றமளிக்கும். முன்னால் முடிந்த அளவு இடம் விடுங்கள். மரம் , பூச்செடிகள் நடுங்கள்.இன்னும் அழகாய் தோற்றமளிக்கும்.
4.    வீட்டிற்கு பொதுமான வெளிச்சம் கிடைக்கும்படி திட்டமிடுங்கள். இது நீங்கள் பகலில் வெளிச்சத்திற்காக மின்சாரம் உபயோகப்படுத்துவதை தடுக்கும்.
5.    வீடு இருக்கும் இடத்தின் காற்றின் திசையை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்றார் போல் ஜன்னல் வையுங்கள். உள்ளெ வரும் காற்று வெளியே செல்வதற்கும் திட்டமிடுங்கள்.  ஒரு ஜன்னல் மட்டும் வைப்பதால் பிரயோஜனமில்லை.
6.    வீட்டின் உயரத்தை திட்டமிடுங்கள். இல்லையெனில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வீடு  தெருவை விட பள்ளமாகி விடும்.
7.    சமயலறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும்.

Friday, November 4, 2011

கடவுள் இருக்கிறாரா ?

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இருக்கிறார் என்றும் இல்லை என்றும் பதில்கள் சொல்கிறார்கள்.என்னை கேட்டால் தெரியாது என்றெ சொல்வேன்.இருக்கிறார் என்பவர்களால் காண்பிக்க முடியவில்லை.இல்லை என்பவர்களால் விளக்க முடியவில்லை. எனவெ தெரியாது என்று சொல்வதுதான் பொருத்தமானது என்பது என் கருத்து. தெரியாத விசயங்களில் கருத்து கூறுவது மிகவும் தவறு.

ஒவ்வொருவர் மனதிற்கும் சரி தவறு  நன்றாகவே தெரியும். அதன் படி  நடந்தாலே வாழ்வு வளம் பெறும்.